ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் "ஆஷ்
அடிச்சுவட்டில்" இன்னும் சில அத்தியாயங்கள் பாக்கியிருக்கிறது. இந்த மாதிரியான புத்தகங்களை போகிற போக்கிலோ,
இரவு உணவிற்குப் பிறகு தூக்கம் வருவதற்கு முன்போ படிக்கக் கூடுவதில்லை. இதற்காக நேரம் ஒதுக்கி பென்சிலும் கையுமாக
உட்கார்ந்து அடிக்கடி குறிப்பெடுத்துக் கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களைப் பற்றிய அத்தியாயம்
துப்பறியும் கதை ஒன்றைப் படிப்பதைப் போன்ற பரபரப்பைத் தருகிறது. அதிலும், குறிப்பாக காங்கிரசை கைப்பற்ற
மிதவாதிகளும் திலகரின் ஆதரவாளர்களும் போட்டியிடுவது, டிடிவி தினகரன் - ஓபிஎஸ்
இபிஎஸ் அணிகளுக்கிடையே நடந்து வரும் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல. மெட்ராசிலிருந்து தனித் தனியே ரயிலேறுகிறார்கள்.
சிதம்பரம் பிள்ளை திலகரின் தளகர்த்தர். முப்பது
பேர்கள் கொண்ட அணிக்கு தலைமையேற்று பிள்ளையவர்கள் முதலில் பம்பாய்க்கு
செல்கிறார். இவர்களுக்கு மட்டும் அங்கு ஒரு
தங்கும் விடுதி - சர்தார் கிருஹம் - திலகரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கிருந்து
சூரத் செல்கிறார்கள். மாநாட்டில் லஜபதி ராய் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்க
திலகர் அணி கடுமையாக முயல்கிறது. ஆனால்
மிதவாதிகளோ காங்கிரசின் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் அவர்களைத் தலைவராக்க ஆவன
செய்கிறார்கள். மாநாட்டிற்கு முந்தைய இரண்டு தினங்களில் இரண்டு அணிகளும் மீண்டும்
மீண்டும் கூடி சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முந்தைய மாநாட்டில் தீர்மானங்களை அப்படியே
ஏற்றுக் கொள்வதைப் பற்றிய முறுகல் முற்றுகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாள் - 27-12-1907 - பெரும் சர்ச்சைக்கிடையே தலைவராக
ராஷ் பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு விட, அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்
போதே, அவரைக் குறுக்கிட்டு திலகர் மேடையேற, அவரை நோக்கி செருப்பு
வீசப்படுகிறது. இலக்கு திலகர்தான். ஆனால்,
அது சுரேந்திரநாத் பானர்ஜியின் கன்னத்தைப் பதம் பார்க்கிறது. தொடர்ந்த அடி உதை குத்தின் உச்சமாக போலீசார்
மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்து தடியடி நடத்த வேண்டி வருகிறது. தன்னை முற்றிலும்
சூழ்ந்து பாதுகாப்புக் கொடுத்த தீவிரவாதத் தொண்டர்களின் உதவியுடனேயே திலகர்
அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார்.
"திலகர் நின்ற நிலையை மதம்பிடித்து கர்ஜித்துக் கொண்டிருந்த பல நூறு
யானைகளின் முன் அமெரிக்கையாய் அடங்கி ஒடுங்கி நின்ற ஒரு சிங்கத்தின் நிலைக்கு
ஒப்பிடலாம்" என்று சிதம்பரம் பிள்ளை அந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவு
கூர்கிறார்.
இன்று கூவத்தூர் - கூர்க் - கட்சி மாநாடுகள் - சட்டமன்றக் கூத்துகள் - யார் தலைவர் என்ற கலவரம் - அடிதடி போன்ற எதையும் பத்திரிகைகள் "வரலாறு காணாத" என்று செய்தி போடத் தேவையில்லை. இவையெல்லாம் 1907-ம் ஆண்டே சீரும் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அடித்துக் கொண்டவர்கள் தேசாபிமானிகள். இன்று அடித்துக் கொள்பவர்கள் தேசத்தின் வியாதிகள். ஆனால் modus operandi ஒன்றுதான்.
இன்று கூவத்தூர் - கூர்க் - கட்சி மாநாடுகள் - சட்டமன்றக் கூத்துகள் - யார் தலைவர் என்ற கலவரம் - அடிதடி போன்ற எதையும் பத்திரிகைகள் "வரலாறு காணாத" என்று செய்தி போடத் தேவையில்லை. இவையெல்லாம் 1907-ம் ஆண்டே சீரும் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அடித்துக் கொண்டவர்கள் தேசாபிமானிகள். இன்று அடித்துக் கொள்பவர்கள் தேசத்தின் வியாதிகள். ஆனால் modus operandi ஒன்றுதான்.
அரசியல் மாறவேயில்லை!
--------
சொல்ல மாட்டேன் போ
புதியதலைமுறை சேனலில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டதில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மகளிடம் அலைபேசியில் பேசி தன்னுடைய மகள் 2002ம் ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாக சொன்னார். அந்த ஆண்டில் இந்த மதிப்பெண்கள் அதிகமானவைதான். சந்தேகமேயில்லை. சந்தேகமெல்லாம் உண்மையிலேயே அவருடைய மகள்தான் அந்த மதிப்பெண்களை கிருஷ்ணசாமியிடம் சொன்னாரா என்பதுதான். YouTube-ல் உள்ள அந்த விடியோவை நவீன தொழிற்நுட்பத்துடன் post mortem செய்து சில தகவல்களை முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். உன்னுடைய மார்க் என்ன என்று டாக்டர் கேட்கும் போது, சொல்ல மாட்டேன் என்று அவருடைய மகள் சொல்கிறார். டாக்டர் மறுபடியும் கேட்க அவருடைய மகள் சிணுங்கியவாறே சொல்ல மாட்டேன் போ என்று மீண்டும் சொல்கிறார். அடுத்த நானோ வினாடியில் 1063 என்று சொல்லியவாறே டாக்டர் தாளில் எழுதுகிறார். பிறகு, மகளின் பட்ட மேற்படிப்பு படித்த இடம், ஆண்டு, போன்றவற்றை டாக்டர் கேட்க மகள் பதில் சொல்கிறார். அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், CBI - FBI போதாது, இஸ்ரேலின் மொசாட் வரவேண்டும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி, தன் மகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்களை கண்டுபிடித்துச் சொல்ல எந்த புலனாய்வு நிறுவனத்தைக் கூப்பிடுவார்?
புதியதலைமுறை சேனலில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டதில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மகளிடம் அலைபேசியில் பேசி தன்னுடைய மகள் 2002ம் ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாக சொன்னார். அந்த ஆண்டில் இந்த மதிப்பெண்கள் அதிகமானவைதான். சந்தேகமேயில்லை. சந்தேகமெல்லாம் உண்மையிலேயே அவருடைய மகள்தான் அந்த மதிப்பெண்களை கிருஷ்ணசாமியிடம் சொன்னாரா என்பதுதான். YouTube-ல் உள்ள அந்த விடியோவை நவீன தொழிற்நுட்பத்துடன் post mortem செய்து சில தகவல்களை முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். உன்னுடைய மார்க் என்ன என்று டாக்டர் கேட்கும் போது, சொல்ல மாட்டேன் என்று அவருடைய மகள் சொல்கிறார். டாக்டர் மறுபடியும் கேட்க அவருடைய மகள் சிணுங்கியவாறே சொல்ல மாட்டேன் போ என்று மீண்டும் சொல்கிறார். அடுத்த நானோ வினாடியில் 1063 என்று சொல்லியவாறே டாக்டர் தாளில் எழுதுகிறார். பிறகு, மகளின் பட்ட மேற்படிப்பு படித்த இடம், ஆண்டு, போன்றவற்றை டாக்டர் கேட்க மகள் பதில் சொல்கிறார். அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், CBI - FBI போதாது, இஸ்ரேலின் மொசாட் வரவேண்டும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி, தன் மகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்களை கண்டுபிடித்துச் சொல்ல எந்த புலனாய்வு நிறுவனத்தைக் கூப்பிடுவார்?
ஜனநாயகம் மிகுந்த
பெருந்தன்மை மிக்கது. இங்கு யாரும் எதைப்
பற்றியும் பேச முடியும். முழுக்க தெரியாத
ஒன்றைப் பற்றி பேச தைரியமும் கொஞ்சம் வெட்கமின்மையும் மட்டும் போதுமானது. NEET
வேண்டும் அல்லது வேண்டாம் என்பது பற்றிய ஒருவரின் கருத்து ஆட்சேபகரமானது அல்ல.
ஆனால், பதினேழே வயது கொண்ட ஒரு மாணவியின் மரணத்தைக் குறித்து கேவலமான ஐயங்களைப்
பொதுவெளியில் குறைந்தபட்ச நாகரீகம் இன்றியும் வெளியிடும் மருத்துவர்
கிருட்டிணசாமி அவர்கள் தன்னுடைய மகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் குறித்து ஒரு வெள்ளை
அறிக்கை வெளியிடுவாரா? அல்லது இதையும் இஸ்ரேலின் மொசாட் வந்துதான் கண்டுபிடித்துச்
சொல்ல வேண்டுமா?
0 comments:
Post a Comment