பயாஸ்கோப்

| Tuesday, December 31, 2013

WE BOUGHT A ZOO

எப்படி எப்படியோ நடந்திருக்க வேண்டியதெல்லாம் நடக்காமல் போன காரணம் நாம் வாய் திறந்து பேசாமல் இருந்ததுதானோ என்பதான தருணங்கள் எவ்வளவு தரம் நமக்கு நேர்ந்திருக்கிறது! தோல்வி, நிராகரிப்பு பற்றிய பயம் நம்மிடமிருந்து எத்தனை பிடித்தமானவைகளை, பிடித்தமானவர்களை விலக்கியிருக்கிறது! தோல்வியைப் பற்றிய பயமே சாகசத்தின் மீது நமக்கிருக்கும் பிரேமையை அழுத்தியிருக்கிறது. தோல்வியடைய, நிராகரிக்கப்பட தயாராகிவிட்டால், வெற்றியடைவதும், ஏற்றுக்கொள்ளப்படுவதும் சுலபமாகிவிடும். ஒரு அசட்டுத் தைரியம் தேவை இதற்கு. கொஞ்ச நேர அசட்டுத் தைரியம் போதும்.

"இருபது நொடி அசட்டுத் தைரியம்" சாதிக்கும் அற்புதங்களைப் பற்றிச் சுவையாக சொல்கிறது WE BOUGHT A ZOO என்ற ஹாலிவுட் படம். Matt Dimon மற்றும் Scarlet Johansson ஆகியோர் பிரதான கதை மாந்தர்களாக நடித்துள்ள படம். அண்மையில் மனைவியை இழந்த Benjamin Mee அவளின் நினைவுகளில் இருந்து தப்பிக்க மகன் மகளோடு வேறு இடம் தேடுகிறான். மகன் அச்சு அசலாக மனைவியைப் போன்றே இருப்பதால் அவனிடம் முகம் கொடுத்துப் பேச முடியாமல் தடுமாற, அப்பாவை தவறாக நினைத்து அன்புக்காக ஏங்கி, பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் கெட்ட பெயர் வாங்கி, பள்ளியை விட்டே துரத்தப் படுகிறான் மகன். மகளோடு பல்வேறு வீடுகளைப் பார்த்த தந்தை, இறுதியாக ஒரு வீட்டை தெரிவு செய்ய, பின்னாலிருக்கும் ஒரு கைவிடப்பட்ட மிருகக் காட்சி சாலையையும் வாங்கினால்தான் முடியும் என்று முகவர் விளக்க, குழம்பிப் போகும் தந்தை, அங்கிருக்கும் மயில்களோடு மகள் கொஞ்சிப் பேசுவதைப் பார்த்த தருணத்தில், அதை வாங்க முடிவு செய்கிறான். 

 மிருகக்காட்சி சாலை அங்கே தொடர்ந்து பணி புரியும் சில நபர்களால் போதிய பணம் இல்லாத காரணத்தால் மோசமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 28 வயதே ஆனா Kelly Foster என்பவள் தலைமையில் பணியாட்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை பற்றிய முன் அனுபவம் கொஞ்சமும் இல்லாத Benjamin Mee ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தாலும், இதை மிருகங்களிடம் அன்பு இல்லாத வேறு எவரிடமோ விற்று விடுவானோ என்ற கவலையும் மிகுகிறது இவர்களுக்கு. அரசுத் துறை அதிகாரி மிருகக் காட்சி சாலையை மீண்டும் திறக்க பல்வேறு நிபந்தனைகளை விதிக்க, அவைகளை நிறைவேற்ற பெரும்தொகை தேவைப்படுகிறது. தன்னுடைய மனைவி $84,000 மதிப்புள்ள முதலீட்டை தனக்காக விட்டுச் சென்றிருக்கிறாள் என்பது தெரியவர, அதை மிருகக்காட்சி சாலையின் மேம்பாட்டுக்காக செலவு செய்ய முடிவு செய்கிறான் Benjamin Mee. மொத்த அணியும் கடுமையாக உழைத்து, ஒரு நாள் பொதுமக்களுக்காக ZOO திறக்கப்பட இருக்கும் நாளின் முன் அந்தியில் இந்த நூற்றாண்டின் அதிகபட்ச மழை பெய்து, அடுத்த நாளின் சாத்தியத்தை கேள்விக்குறியாக்குகிறது. 

 அடுத்த நாள் சூரியனோடு விடிவது ஒரு புதிய தொடக்கத்தின் குறியீடாகும். மக்கள் சாரி சாரியாக வரிசையில் நிற்கிறார்கள். மக்களோடு ஒரு புதிய வெளிச்சம் மிக்க வாழ்க்கையும் Benjamin, Kelly உள்ளிட்ட ZOO நபர்களுக்கு உறுதிப்படுகிறது. ஊடாக, Benjamin - Kelly இடையே ஒரு உறவு மலர்வதற்கான சாத்தியம், மகனுக்கும் தந்தைக்குமான உணர்வுச் சிக்கல்கள், மகனுக்கும் அவன் வயதையொத்த Kelly-யின் உறவுப் பெண்ணிற்கும் இடையே மலரும் நட்பு, ஏழே வயது நிரம்பிய சிறுமியின் பார்வையின் வழியே காண்பிக்கப்படும் உலகம் என்று பல subtexts படத்தின் பரிமாணங்களை பிரம்மாண்டப்படுத்துகின்றன. 

 ஒரு இடத்தில் Kelly கேட்கிறாள்: "முன் அனுபவமே இல்லாத நீ, ஏன் இந்த மிருகக் காட்சி சாலையை வாங்கினாய்?" Benjamin சொல்கிறான்: "Why not?"

 "இருபது நொடி அசட்டுத் தைரியம்" என்னென்ன விடயங்களையெல்லாம் சாதிக்கிறது!

டார்ச் லைட் 5

| Sunday, December 29, 2013
மூடர் கூடம்

கலை வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டுமா? யதார்த்தவாதம் இலக்கியத்தில், கலையில் எடுத்துக்கொள்ளும் பங்கு என்ன? யதார்த்தத்தை விட்டு விலகியிருக்கிற ஒரு படைப்பை எதை வைத்து அடையாளம் கண்டு கொள்வது? வாழ்க்கையில் யதார்த்தத்தின் பங்கு என்ன? யதார்த்தத்தை விட்டு வாழ்க்கை அடிக்கடி விலகுவதின் காரணம் என்ன? அப்படி விலகிய தருணங்கள்தான் வாழ்க்கையையே முடிவு செய்யும் கணங்களாகிப் போவது தற்செயலா? அபத்தமா? எனக்கு தோன்றுவதுண்டு. இங்கே யதார்த்தம் என்று ஒன்றும் இல்லை. எல்லாமே மிகைப்படுத்தல்கள்தான். மிகைகள்தான் மிகையின்மையை நமக்கு காட்டுகின்றன. மிகையின்மையை நாம் அடையவே முடியாது. கூடியோ குறைத்தோதான் பொருந்திவரும். வேண்டுமானால், ரொம்பவும் மிகையானது என்ற அளவில் சில படைப்புக்களைப் பற்றி பேசலாம். எம்ஜியார், விஜயகாந்த் மற்றும் 99 சதவீத தமிழ் படங்கள், கவிதைகள், நாவல்கள் "ரொம்பவும் மிகையானது" என்பதிற்குள் வருவதென்பது தற்செயலா போன்ற கேள்விகள் சுவையானவை.

மூடர் கூடம் மிகைநிகழ் படைப்பு. இதில் கேள்வி இல்லை. இது "ரொம்பவும் மிகையானது" என்பதில் சேர்த்தியில்லை. இதிலும் கேள்வி இல்லை. இந்த இரண்டுக்கும் இடையில் நின்று இப்படைப்பு உருவாக்கித் தரும் சாத்தியங்கள் ஆச்சரியமானவை. நகைமுரண் மிகவும் பிறழ்ந்துபட்ட உருவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குரூரமான, நடந்துவிடவே கூடாத பயங்கரமான சம்பவத்தின் மூலம் ஒரு குடும்பம் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறது. தன்னை முதல் முறையாக குடும்பமாக ஆக்கிக்கொள்கிறது. உலகம் பிதுக்கிப் போட்ட சில நபர்கள் தன்னிச்சையான சம்பவங்கள் உதவியால் சந்தித்துக் கொள்கிறார்கள். சம்பவங்களின் உதவியாலாயே தம்மிடம் இருந்து வந்திருக்கிற மனிதத்தை அடையாளம் காண்கிறார்கள். மூடர்களாக தொடர்வது அப்படியொன்றும் இழிந்தது அல்ல என்ற பெரும் உண்மையை தரிசிக்கிறார்கள். எதையுமே 'பாவம் - புண்ணியம்' என்ற இரு கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நினைப்பை ஒழித்தொழிக்கிறார்கள். "சம்பவங்கள்தாம் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது" எனும் புரிதல் உண்டு இவர்களிடம். காதல், வீரம், அன்பு, பாசம் போன்றவை எல்லாம் subject to conditions என்பது இவர்களுக்கு சம்பவங்கள் வழியே நன்றாகத் தெரியவருகிறது.

படம் எடுத்தவருக்கு கேமரா மூலம் ஒன்றை சொல்ல முடிவது கையாளும் ஊடகத்தின் மேல் இருக்கும் ஆளுமையால்தான். வசனம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு, பாவம் மற்றும் மௌனம் மூலம் அர்த்தம் சொல்லப்படுவது பெரும் கலைஞர்களின் முறை. இப்படத்தில் பாவம் மற்றும் மௌனம் அர்த்தம் சொல்கின்றன. பெரிய கலைஞர்கள் குழந்தைகளை சிறப்பாகப் பயன்படுத்துவர். இதில் பிஞ்சுகள் குழந்தமை மீறியவர்களாக காட்டப் படவில்லை. ஆகப்பெரிய கவிகளின் படைப்புக்கள் பாடல்களாக, கொஞ்சமாக, பயன்படுத்தப்படுவது இயக்குனர் ஆளுமைகளுக்கு அஞ்சுவதில்லை என்று சொல்கிறது.

தற்கால நோக்கில், மூடர் கூடம் தமிழில் ஒரு முக்கியமான படம்.

----

 The Front Page

ஒரே நாளில் நடந்து முடிந்த சம்பவங்களை வைத்து தமிழில் எடுக்கப்பட்ட படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சுஹாசினி நடித்து ராபர்ட் ராஜசேகர் இயக்கிய எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு படம் ஞாபகம் வருகிறது. அண்மையில் நேரம் போன்ற சில படங்கள். The Front Page என்ற அமெரிக்க படத்தை பார்த்தேன். [1974-வது ஆண்டு வெளிவந்தது. இதற்கு முன்னரே இதே கதை 1930 சமயத்தில் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.] Billy Wilder இயக்கி Jack Lemmon மற்றும் Susan Sarandon நடித்தது. அற்புதமாக இருக்கிறது. கதா நாயகன் ஒரு பத்திரிகை நிருபர். மிகவும் திறமையானவன். ஆனால் ஒரு சமயத்தில் தான் செய்து வரும் வேலை போரடித்துவிட, ஒரு பணக்கார விதவையை திருமணம் செய்துகொண்டு Philadelphia சென்று செட்டிலாக விரும்புகிறான். முதலாளிக்கு அவனை விட்டு விட மனமில்லை. இதற்கிடையே, அடுத்த நாள் காலை அரசியல் கைதி Earl William தூக்கிலிடப்பட இருக்கிறான். இது குறித்து ஒரு scoop கிடைத்து விடாதா என்று ஏங்கும் கதா நாயகனின் முதலாளி நிருபரின் கல்யாணத்தை முறித்துப் போட்டு, அவனை தன்னுடனேயே வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். கடைசிக் காட்சியில் ரயிலடியில் அவன் கைப்பிடிக்கப் போகும் பெண்ணோடு வாழ்த்தி தன்னுடைய கைக்கடிகாரத்தை பரிசளிக்கும் முதலாளி, ரயில் கிளம்பியவுடன் போலீசிடம் புகார் கொடுக்கிறார்: "என்னுடைய வாட்சை திருடியவன் கிளம்பிய ரயிலில் பயணிக்கிறான். அவனைக் கைது செய்து கொண்டு வாருங்கள்."

படம் முழுக்க வசனம் சரமாரியாக விழுந்து கொண்டே இருந்தாலும் போரடிக்கவே இல்லை. மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். American Humor நொடிக்கு நொடி கிளம்பிக் கொண்டே இருக்கிறது. 

"மூடர் கூடம்" போன்றவை நம்பிக்கைத் தந்தாலும் The Front Page போன்ற படங்கள் நமக்கு தீராத ஏக்கமூட்டுவதாகவே உள்ளன.

----

Serendipity ஆங்கிலப் படத்தை சில வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தேன். முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட அதே feel good உணர்வுதான். ஒரே ஒரு வித்தியாசம். மாதவன் நடித்த ஒரு தமிழ்ப் படம் ஞாபகம் அப்போது வரவில்லை. இப்போது பார்த்தபோது ஜேஜே என்ற மாதவன் படம் நினைவுக்கு வந்தது. ஜேஜே creative inspiration வகையிலெல்லாம் சேர்த்தியில்லை. பிரதியெடுத்தல்தான். அதை இன்னும் aesthetic-ஆக செய்திருக்கலாம்.

----

தேவகோட்டையில் கந்தர் சஷ்டி கவச விழாவில் நாஞ்சில் சம்பத் போன வருடம் பேசியிருக்கிறார். YouTube-ல் கேட்டேன். வழக்கமான விசேஷம் எதுவும் அவர் பேச்சில் இல்லை. இருந்தாலும் முன்னாள் மதிமுக-காரர் ஆன்மீக மேடையில் பேசக் கேட்பது சற்று புதுமை. பக்தி இலக்கியங்களைப் பற்றி இன்னும் நிறைய ஹோம் வொர்க் செய்துவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

ஜான் ஸ்டீன்பெக் - நோபெல் ஏற்புரை (1962)

| Sunday, December 22, 2013
ஜான் ஸ்டீன்பெக் - நோபெல் ஏற்புரை (1962)
இந்த மிகப்பெரும் பெருமைக்குரியதாக எனது படைப்புக்களைக் கண்ட ஸ்வீடிஷ் அகடெமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மிகவும் மதிக்கின்ற பெரும் படைப்பாளிகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்த விருது எனக்கு தரப்பட்டிருப்பது சரியானதுதானா என்ற சந்தேகம் வலுப்பினும், இந்த விருதினைப் பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்வதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்.

இலக்கியத்தின் தன்மை மற்றும் போக்கு ஆகியவற்றைப் பற்றி தனது அரும்பெரும் கருத்துக்களை இங்கு விருது பெரும் கனவான்கள் சொல்வது வாடிக்கைதான் என்றாலும் கூட, இந்த சமயத்தில் இலக்கியகர்த்தாக்களின் முக்கிய கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றி உரையாடுவதுமே பயன்தரும் என நான் நினைக்கிறேன்.

கானகமே அஞ்சி ஒடுங்கும் முகமாக பெருங்குரலெடுத்து, எமக்கு முன்னே இங்கே இப்பெருமைக்கு தங்களை உரித்தாக்கிக் கொண்ட இலக்கியச் சிங்கங்களைப் போன்றே கர்ஜிப்பது இந்த மேடைக்குப் பொருத்தமானதே. எலிகளைப் போல க்ரீச்சிடுவோருக்கு இந்த மேடை இல்லை.

தேடுவோர் யாருமே நுழையாத ஆலயங்களுக்குள்ளே நின்று தங்களது வெற்று வேண்டுதல்களை இறைஞ்சித் திரியும் சாமியார்கள் தம்மையும் பிறரையும் உயர்த்துவதற்கு தவறிய மேடைகளின் மீதேறி மதம் பிடித்து கூவுவதல்ல இலக்கியம்; சாரமற்றதால் விரக்தியாகி துறவிமார்கள் தங்கள் வெற்றுப் பகட்டை வெளிக்காட்டும் விதமாய் விளையாடும் ஆட்டமுமல்ல இலக்கியம்.

இலக்கியத்தின் வயதும், மனித பேச்சின் வயதும் ஒன்றே. பேசிப் பேசியே இலக்கியம் வளர்கிறது. மனிதனின் தேவை காரணமாகவே தன்மை மாறி மாறி தன்னை அது வளர்க்கிறது.

பாணர்களும், பாடகரும், கவிகளும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறானவர்களல்ல. ஆழிசூழ் காலந்தொட்டே மனிதம்தான் அவரின் பணிகளை, கடமைகளை, பொறுப்புக்களை தீர்மானித்திருக்கிறது.

குழப்பத்தால் விளைந்த சோம்பல் மற்றும் துயரத்தால் ஆன ஒரு காலத்தை மனிதகுலம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது. இங்கே எனக்கு முன்பாகவே நின்ற எமது முன்னோடி வில்லியம் ஃபாக்னெர் இந்த துயரத்தை மனிதம் மொத்தத்தையே பீடித்திருக்கும் பெரும் பயம் என்றும், இத்தகையதோர் பெரும் அச்சம் ஆன்மாவிலிருந்து கிளைத்ததல்ல என்றும், மனிதனின் இதயம் தன்னுடனேயே நடத்தி வரும் மோதலால்தான் இந்தப் பேதம் விளைந்தது என்றும், இலக்கியப் படைப்பாளிகள் இந்த குழப்பத்தைத்தான், பிடித்து உலுக்கும் இந்த அச்சத்தைத்தான், தமது எழுத்துக்குள் பிரதியெடுக்க வேண்டும் என்றும், இதுவே எழுத தகுதியானது என்றும் கூறினார்.

மற்ற எவரையும் விட மனிதனின் பலம், பலஹீனம் ஆகியவையை ஃபாக்னெர் நன்கறிவார். இந்தப் பயத்தைப் பற்றிய புரிதலையும் தீர்வையும் எழுத்தின் வழியே உருவாக்குவதன் மூலமே படைப்பாளி தனது இருப்பை நியாயப்படுத்த முடியும் என்பதையும் அவர் அறிவார்.

இது புதிதும் அல்ல. ஆதியிலிருந்தே இதுதான் படைப்பாளியின் பணி. நம்முடைய மன்னிக்க முடியாத தவறுகளை, மீள முடியாத தோல்விகளை தமது எழுத்தால் படைப்பாளி தோலுரிக்க வேண்டும்; நம்முடைய கேவலமானதும், பேராபத்துக் கொண்டதுமான ரகசியக் கனவுகளை தனது எழுத்தால் படைப்பாளி பொதுப் பார்வைக்கு கொண்டுவரக் கடவான். உலகத்திடம் இவைகளை நிர்வாணமாக்கிக் காட்டுவதின் மூலம் மட்டுமே பரிசுத்த நிலை சாத்தியம்.

மேலும், மனிதனின் உயர் குணங்களையும் பற்றி படைப்பாளி எழுதுவான். மனித ஆன்மாவிற்கும் இதயத்திற்கும் இயல்பாகவே உள்ள சாதிக்கும் ஆற்றலை படைப்பாளி கொண்டாடி மகிழ்வான். தோல்வியில் மனிதன் காட்டும் பெருந்தன்மையைப் பற்றியும் அவன் எழுதுவான். வீரம், நேசம் மற்றும் அன்பு மனித குணங்களே என்பதையும் எழுதுவான். நம்மைச் சூழ்ந்திருக்கும், முடியாததாய் தோன்றும் பயம் மற்றும் துயரத்திற்கெதிரான போரில், இவன் எழுத்துத்தான் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை. இவன் பேனாவே நம் ஜெயக்கொடி.

மனிதன் தன்னை மாசற்ற பொன்னாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உண்மையாகவே இல்லாதவனுக்கு இலக்கிய உலகத்தில் இடமில்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

நம்மைப் பீடித்திருக்கும் ஆகப்பெரிய இந்த அச்சமானது, மனிதனது அறிவு முன்நகரும் போது நடந்திருக்கும் மோதலில் உருவானதுதான்; செய்திருக்கவே கூடாததை எல்லாம் நாம் செய்ததும் இன்னொரு காரணமே.

இந்த பெரும் பயத்தை நாம் வென்றேடுத்தே ஆக வேண்டும். முடியாது என்று நம்ப வேண்டியதில்லை. இதிலே படைப்பாளிக்கு இருக்கும் பங்கு ஏனையரைவிட மிகப் பெரியதாகும்.

நண்பர்களே, மனித குலம் எவ்வளவு பாரியமான இடர்களைச் சந்தித்தே இவ்விடம் சேர்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். இயற்கைப் பேரழிவுகள் பல நம்மை தடம் தெரியாமல் ஆக்கிவிடக் கூடிய தருணங்களைத் தாண்டி வந்திருக்கிறோம். இதுவரை மனிதன் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையும் விட, பெரிய வெற்றியைப் பெற்றுவிடக்கூடிய இந்தத் தருணத்தில் நமது போராட்டத்தைக் கைவிட துணிவது மடமையே ஆகும்.

நூல்கள் பல பெரும் சிந்தனையாளர் என்று வருணிக்கும் ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களுடைய சரிதத்தை அண்மையில் படித்தேன். மனதின் குரலோ கணிப்போ கட்டுப்படுத்தாமல், உருவாக்கும் நன்மைக்கும் அழித்தொழிக்கும் தீமைக்கும் இடையில் சார்பென்றும் இல்லாமல் வெடித்துக் கிளம்பும் பேராற்றலை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர் நோபெல். தன்னுடைய கொடைகளில் சிலவற்றை மனிதன் துஷ்பிரயோகம் செய்ததைக் கண்ட நோபெல், தான் மனிதனின் கடைசி அழிவிற்குக் காரணமாய் இருந்துவிட்டதை உணர்ந்திருக்கக் கூடும். எல்லாவற்றையும் சந்தேகப்படுபவராக நோபெல் மாறியிருந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்; நான் அவ்வாறு கருதவில்லை. நெறிப்படுத்தும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும், பேராசையைத் தடுக்கக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடிக்க முனைந்த நோபெல், அதை மனிதனின் இதயத்திலும் ஆன்மாவிலுமே கண்டார். இந்த நோபெல் பரிசுகள் எந்தெந்த துறைகளில் வழங்கப்படுகிறது என்பதை கவனிக்கும்பொழுது, நோபலின் மனம் நமக்கு புலனாகிறது.

தொடர்ந்து பல்கிப் பெருகும் மனிதனின் அறிவுப் புலத்திற்காய் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த மனிதனையும் அவன் சகவாசங்களையும் அவனுள் புகுந்து அறிவதே இலக்கியத்தின் பணியாகும். மேலும், மனிதத்திற்கு தூணான சமாதானத்தை தேடிச் சென்று அடைவதற்கான அவனது தீரமான முன்னெடுப்புக்களைப் பாராட்டியும் இவ்விருதுகள் வழங்கப்படுவது, மற்றெல்லாவற்றையும் விட பொருத்தமானதே.

அவர் இறந்து ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே, இயற்கை ஆற்றலின் உயர்பட்சம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இந்தத் தருணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் நாம்?

கடவுளுக்கென்று மட்டுமே இருந்த சில அரும் பெரும் சக்தியை நாம் பறித்துக் கொண்டாகி விட்டது. கடவுள் தன்மையே கொஞ்சமும் இல்லாமல், குரங்கின் கையில் கிடைத்த தென்னம் பழமாய், இந்த மொத்த உலகிற்கும் அருள்பாலிக்கும் தேவலோக அதி உயர் அரியாசனத்தில் அமர்ந்துவிட்ட நாம், எந்த வகையில் இவ்வையகத்தை வழிநடத்தப் போகிறோம்?

அழிவையும் வாழ்வையும் இத்தருணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே முடிவு செய்யும்: நம்மை நாமே அறிய இதுவே தருணம்.
பயணத்திற்கான துணிவை எந்த தேவதையிடமும் துதித்துப் பெற வேண்டியதில்லை; அதுவும், கடவுளின் அரியாசனத்திலேயே அமர்ந்துவிட்ட பிறகு. இதற்கான துணிவை நம்மிடமிருந்தே பெற்றாக வேண்டும்.

இனி, மனிதனே தனக்கு தோழனும், துரோகியும் ஆவான். 
விவிலியத்தில் புனிதர் ஜான் அருளியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்வது இவ்விடத்தில் பொருத்தமே.

"எல்லாம் முடிந்த பிறகு,
அங்கே
ஆதி சப்தம் மிஞ்சும்:
அது மனிதனுக்காய்
மனிதனுடனேயே
இருக்கும்."

அனைவருக்கும் நன்றி.

"கோபல்ல கிராமம்" - கி.ராஜநாராயணன்.

| Saturday, December 21, 2013

மண்ணின் மனம் கமழ எழுதுவது முன்பெல்லாம் இலக்கிய முயற்சியாக அறியப்பட்டதில்லை. அச்சுத் தமிழ் என்ற ஒன்று பாட புத்தக தமிழோடு நெருங்கிய உறவாய் பிரிக்க முடியாதபடி இருந்தது. ஆங்கிலத்திலே முன்முயற்சிகளாக நடந்துவந்த diaspora literature, ஏன் அதற்கு முன்னமேயே இருந்த வட்டார வழக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல நவீனங்கள் [டி.ஹெச்.லாரன்ஸ் அவர்களின் லேடி செட்டெர்லீஸ் லவர் போன்றவை] இலக்கிய அந்தஸ்தை பெற்றிருந்த காலங்களில் தமிழில் அம்மாதிரியான முன்னெடுப்புக்கள் அரிதாகவும், வந்த சிலதும் இலக்கிய வாசிப்பின் அந்தஸ்தை பெறாமலும் சுவடு தெரியாமல் இருந்தன. கி.ராஜநாராயணன் அவர்கள் இத்தகைய எழுத்துக்கு பெரிய கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் முக்கியமானவர். இவரின் "கோபல்ல கிராமம்" வெளிவந்த நாட்களில் பெரும் அலைகளை ஏற்படுத்திய நவீனம். [இது நவீன வகையில் சேர்த்தியா என்ற சர்ச்சை இன்னும் நடப்பதுண்டு]. எழுபதுகளில் வெளிவந்த "கோபல்ல கிராமம்" பல்வேறு காரணங்களால் முக்கியமான படைப்பாகும். துலுக்க ராஜாவுக்கு பயந்து தெற்கு நோக்கி அலை அலையாய் புலம் பெயர்ந்த நாயக்கமார்களை பற்றிய, ஒரு காலப்புள்ளியில் குத்தி நிற்கிற, கதை மட்டும் அல்ல இது. இந்தப் படைப்பு முழுக்க காலம் முன்னும் பின்னும் நகர்கிறது. "நூத்தி முப்பத்தைந்து" வயதான முதுகிழவி சொல்லும் கதையாக கடந்தகாலம் விரிய, "கோட்டையார்" வீட்டுக் கதையாக கதை நடக்கும் காலம் தொடர்கிறது. நாயக்கர்களின் கதை இது என்று மற்ற சமூகத்தினர் இதை அசட்டை செய்ய முடியாது. இது எல்லோருடைய கதை. எல்லா கிராமத்தின் கதை. கோட்டையார் வீட்டு நாயக்க அண்ணன் தம்பிகள், அக்கையாக்கள் எல்லா கிராமங்களிலும் உண்டு. ஒரு "பெரிய வீடு" இல்லாத கிராமம் இல்லை. "சென்னா தேவிகள்" பற்றிய புராணங்கள் இல்லாத நிலப்பரப்பே இந்திய மண்ணில் இல்லை. அந்நியரே புகாத, தூரத்தையே காலத்தால் அளந்த ஒரு சமூகம் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளால் நிறம் மாறத் துவங்குவதை இப்படைப்பின் இறுதியில் அறிகிற நாம், இந்த "கோபல்ல கிராமம்" இனி என்ன ஆகுமோ என்ற பதைப்புடன் புத்தகத்தை முடிக்கிறபொழுது, கிரா அவர்கள் தன்னுடைய படைப்புலகத்தால் ஒரு புதையுண்ட காலத்தை அதன் உயிரின் எல்லா அம்சங்களோடும் மறு நிர்மாணம் செய்துவிட்டதை உணர முடிகிறது. இந்த நவீனத்தில் உரையாடலை பயன்படுத்திய விதம் நம்புவதற்கே இயலாதது. கரிசல் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகளில் "கோபல்ல கிராமம்" சந்தேகமில்லாமல் முக்கியமானது. நான் இப்பொழுதுதான் இதைப் படித்தேன் என்ற சொல்ல வெட்கமாக இருக்கிறது என்றாலும், இப்பொழுதாவது படித்தேனே என்பதில் ஆறுதல் அடைகிறேன். 

(காலச்சுவடு இலக்கிய வரிசை வெளியீடு, உரூபா 200/-)

கடல்புரத்தில்...

| Thursday, December 19, 2013
"அம்மா கடலம்மா, எங்க ஒலகம் நீயம்மா"
 எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதில் மாயமாகிப் போன தமிழனுக்கு அவனுக்குப் பயன்தராத எல்லாமே தமிழ் துவேஷமாக தெரிகிறது. தமிழ் பள்ளிகூடத்திற்கு மகனை மகளை அனுப்பினால் எதிர்காலம் பாழ் என்று நினைக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் தோராயமாக ஏழு கோடி பேர் என எதிர்பார்க்கலாம். இந்த ஏழு கோடி பெரும் ஓட்டுப்போட, இவர்களிடம் ஒட்டு வாங்க "தமிழ்" கோஷம் தேவை. தமிழுக்கு பெரும் சகாயம் செய்யும் பெருந்தகைகள் அமைதியாக மொழியியல் சேவை செய்து கொண்டிருக்க, ஒட்டு வங்கி அரசியல்வாதிகள், பட்டி மன்ற இரைச்சல் பேச்சாளிகள், பெரும்பாலான அரசுப் பள்ளிக்கூட, கல்லூரி தமிழ்ப் பண்டித பெருமக்கள் தமிழுக்காக விடுக்கும் அறைகூவல்கள் மூன்றாம் தரமானவை. எனக்குத் தெரிந்த எல்லா அரசு பள்ளி மற்றும் கல்லூரி தமிழ் ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். இதுதான் படித்த தமிழ் இவர்களுக்கு செய்யும் சேவை. தமிழ் இங்கே வெறும் அரசியல் கூச்சலாக மாறி ரொம்ப நாளாகிறது. தமிழ்த் தொண்டு செய்வோர் அமைதியாக இலக்கியத்திலும், கணினி துறையிலும், அறிவியலிலும் தமிழை ஈடுபடுத்தி வருவது, நம்மை கொஞ்சம் ஆறுதல் படுத்தும் விஷயம்.
அடுத்து கவலை அளிக்கும் விஷயம் "தமிழன்". தமிழன் எது செய்தாலும் சரி. கேள்வியோ, எதிர்வாதமோ ஒருவனை தமிழ்த் துரோகி ஆக்கி விடும். "துரோகி" ஆகப் பயந்து, கேள்வி கேட்காமல் இருப்போர் இங்கு ஆறு கோடி பேராவது தேறும். 2013ம் ஆண்டு 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் இலங்கை அரசிடம் கைதானார்கள். இலங்கையின் அட்டகாசம் இதுவென்றும், சிங்கள அரசை தடுத்து நிறுத்தாத மைய அரசு "தமிழர் விரோதி" என்றும் பிரச்சாரங்கள் விண்ணைப் பிளக்கின்றன. மன்மோகன் சிங் தடுமாறிப் போகிறார். இதைப் பற்றி ஊடகத்திடம் பேசும் புதுவையைச் சேர்ந்த நடுவண் அரசு அமைச்சர் நாராயணசாமி தெளிவாக விளக்காமல் உளறுவது "தமிழ் நேயர்களுக்கு" ரொம்பவும் வசதியாக போய்விட்டது. 
நடப்பதுதான் என்ன? தமிழ் மீனவர்களில் "well-equipped long liners" வைத்திருப்போர் சர்வதேச கடல் எல்லையை [International Maritime Boundary Line] மீறி இலங்கை கடல் எல்லைக்குள் போகும்போது அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையினரின் கடமை. அதை செய்யத் தவறினால், வட இலங்கை தமிழ் மீனவரின் வாழ்வுரிமையை காக்கத் தவறியதாக, இலங்கையின் மைய அரசின் மீது, புதிதாக வட இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரனின் தலைமையிலான TNA பிராந்திய ராஜ்ஜிய அரசு குற்றச்சாட்டை தொடுக்கும் அபாயம் உண்டு. இலங்கை நடுவண் அரசு அத்தகைய குற்றச்சாட்டை, மனித உரிமை மீறல் சம்பந்தமான ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதால் சர்வதேசியத்திடம் ஏற்கனவே வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், நிச்சயமாக விரும்பாது. IMBTஐ தாண்டும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவரை கைது செய்வதைத் தவிர கொழும்புக்கு வேறு வழியே தற்சமயம் இல்லை. 
இதில் தமிழ் நாட்டு மீனவர் தரப்பு என்ன சொல்கிறது? [1] தமிழ் நாட்டு மீனவர்கள் தெரியாமல் சர்வ தேச எல்லையைக் கடந்து விடுகிறார்கள். பதில்: இது வடிகட்டின பொய்யாகும். இன்று கடலில் நெடுந்தூரம் செல்லும் அனைத்து மீன்பிடி படகுகளிலும் GPS வழிகாட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. [2] தமிழ் நாட்டு மீனவர்கள் சர்ச்சைக்குரிய கடல் பிரதேசங்களில் கடந்து முப்பது வருடங்களுக்கு மேலாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களை அந்த இடங்களில் திடீரென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று சொன்னால் எப்படி? பதில்: 2009க்கு முன் இலங்கையில் இருந்த நிலைமை வேறு. அங்கே இனவெறிக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த நிலையில், தமிழ் நாட்டு மீனவர்கள் சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் மீன் பிடிக்க முடிந்ததற்கு காரணம் இலங்கை அரசின் கண்காணிப்பு இல்லாததால் மட்டுமே. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இந்த "திடீர்" என்ற வாதம் செல்லாது. [3] இது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம். பதில்: இது வட இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் கூட. 
இதற்கு தீர்வுதான் என்ன? திரு.விக்னேஸ்வரன் அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மற்றும் இலங்கை, இந்திய நடுவண் அரசுகளின் அதி உயர் பிரதிகள் அமர்ந்து பேசி, பக்க சார்பு இல்லாமல், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் உதவியோடு அறிவுபூர்வமாக அணுகி எடுக்க வேண்டிய முடிவாகும். 
அதுவரையில், தமிழ் ஊடகங்கள் [காணொலி, இணையம் மற்றும் அச்சு] பொறுமை காக்கலாம். தங்களுடைய "செய்தி விற்பனை" குறித்து கவலையே வேண்டாம். "பிரியாணி" விமர்சனமும், படக்குழுவின் செவ்விகளும் இடத்தையும் நேரத்தையும் அடைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றன. போதாதென்றால், "ஹன்சிகாவிற்கும் சிம்புவிற்கும் சண்டையாமே, உண்மையா?" பார்த்துக் கொள்ளும். 
[இந்த இடுகைக்குத் தேவையான தரவுகள் மீரா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய A SEA OF CONFLICT கட்டுரையில் இருந்து பெறப்பட்டுள்ளது]
 

TEN TIPS FOR SPEAKING ENGLISH

| Wednesday, December 18, 2013
 
Raghavan, an engineering graduate from Coimbatore, said that the following practices helped him when he was learning English:
1. The first thing I would do after getting up every morning was to read the newspaper, front to back. It doesn’t matter which newspaper you subscribe to, as long as it is a major English-language paper, such as The Hindu, The Times of India, The Indian Express, etc. While different people have different opinions on the quality of each paper, they are all more or less equally useful in getting to learn the language. It is also not necessary to read every page and article; it is time-consuming and sometimes boring. However, you should most definitely look for articles that interest you.

2. I bought a pocket dictionary. They are cheap, compact and useful. There were many words I came across on a day-to-day basis that I did not know, and carrying a pocket dictionary everywhere allowed me to look up these words immediately so that the matter would not slip my mind later.

3. Once learned, I also made a conscious effort to use the words in conversation. This instilled the words in my head and I was able to draw on them whenever required.

4. I convinced some of my friends to come together and form something of a ‘study group’; we were all interested in learning English, and I figured it would make it easier and more fun for us to do it together. We met twice a week in the evening and discussed the words and phrases we had come across, suggested articles, magazines, and books to each other, etc.

5. Another thing my group of friends and I kept in mind was the importance of talking only in English, whenever possible. During our weekly meetings, not a word of Tamil (the only other language any of us spoke) was uttered. This sort of commitment is absolutely necessary if you want to develop fluency.

6. A couple of weeks into my learning experience, a friend broached the issue of language of thought during one of our meetings. This, too, is an interesting aspect of one’s linguistic foundations: what language do you think in? I realised that I thought in Tamil, and thus whenever I spoke in English, I was, in a way, translating in my head. This made the entire process slower and more laborious, so I decided to start making a conscious effort to think in English. When I spoke in Tamil, I was often trying to figure out beforehand what the phrase would be in English before I said it. This takes some getting used to, but soon you will find it has become second nature; the phrases come fast and easy.

7. I made it a point to pick up at least one English book a month. I cannot stress the importance of this enough; books introduce you to the possibilities of the language, expose you to the various ways in which words can be manipulated and played around with. Your vocabulary of words, phrases, colloquialisms, etc will increase sharply this way. Also, reading develops thinking, i.e. as you read, you will automatically begin to think more in the language that your reading material is written in.

8. Every night I would watch an English news channel (NDTV, Headlines Today, CNN-IBN, etc) for at least half an hour. The news anchors and reporters generally speak very crisp and proper English. It is also useful to watch English TV shows.

9. My friends and I would rent the DVD of an English movie every week, and watch it with the subtitles on. This way, you can always make out what the actors are saying, and the context of the movie helps you understand what unfamiliar phrases might mean.

10. I developed the habit of paying close attention whenever I was within listening distance of a conversation in English. This may seem like eavesdropping, but when someone is speaking loud enough in public for others to hear him or her, it is unlikely that anything very personal is being discussed. At least, I defended my practice with that rationale, because it helped me pick up common phrases on a daily basis.

HOW TO IMPROVE YOUR ENGLISH

|
 The importance of the English language cannot be overemphasized. Comfort with English is almost a prerequisite for success in the world today. Regardless of the industry, proficiency in English is an important factor in both hiring and promotion decisions.

A lot of us have studied English in school and are fairly comfortable with reading and writing. However, we hesitate while speaking because we feel that we lack the fluency and may make grammatical mistakes. We are afraid of speaking English in formal situations and we are quick to switch to our native language once we are in the company of our family and friends.

There is no quick fix when it comes to improving your command over a particular language. It always requires a lot of time and effort.

Here are top ten tips for success in achieving proficiency and fluency in English:
1. Do not hesitate. Talk to whoever you can. Decide among your circle of friends that you will only talk in English with each other. This way you can get rid of hesitation and also have your friends correct you when you are wrong.

2.Start conversation with strangers in English. Since you do not know them personally, you will feel less conscious about what they would feel about you.

3. Maintaining a diary to record the events of your day is a great way to practice your writing skills. Take your time to use new words and phrases when you write in your diary.

4. Read the newspaper. Read it aloud when you can. Concentrate on each word. Note down the words you don’t understand and learn their meanings. Try to use these words in your own sentences.

5. Watch English movies and English shows on television. Initially, you can read the sub-titles to follow the conversation. As you practice more, you will realize that you are able to follow the conversation without needing to read the sub-titles.

6. Set aside an hour every day to watch English news channels. This is one of the most effective ways of improving your comprehension.

7. Podcasts are available on the internet. These are audio and video files and many of these can be downloaded for free. These are a great way to practice listening skills and develop an understanding of different accents.

8. It is usually quite difficult for a beginner to understand the words of an English song as there is background music and the accent of the artist may be unfamiliar to the listener. Read the lyrics while you listen to the song and you will comprehend better. Once you start following the voice of a particular singer, you will find it much easier to understand the singer’s other songs too.

9. Another effective way is to record your own voice and listen to it. You will notice hesitations and pauses. You may also notice that you make some grammatical mistakes while speaking that you do not make while writing. You must aim to improve and rectify these mistakes in subsequent recordings.

10. Ask people who speak better for advice. There is no shame in seeking help especially if you are trying to improve yourself. Talk to them in English and ask them to correct you whenever you are wrong.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்...

| Tuesday, December 17, 2013
Stay Hungry. Stay Foolish.

[STANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005 அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை]

உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின் பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்த பெருமையுறுகிறேன்நான் பட்டம் எதுவும் பெற்றவனல்லஉண்மையில், பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான் பார்க்கிறேன். மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்கு சொல்லுவதுதான் எனது நோக்கம். வேறெதுவுமில்லை

 முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும். ரீட் கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே இடை நின்று, ஆனால் அதே இடத்திலே பதினெட்டு மாதங்கள் சுற்றித் திரிந்தேன். ஏன் கல்லூரிப் படிப்பை நான் பாதியில் நிறுத்த நேர்ந்ததுஇதற்கான காரணம் நான் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்திருந்தது. என்னைப் பெற்ற தாய் திருமணமாகாதவள்; கல்லூரியில் பட்டப் படிப்பை தொடர்ந்துகொண்டிருந்தவள். என்னை சுவீகாரம் தர முடிவெடுத்தாள், ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்என்னை சுவீகாரம் எடுக்கும் பெற்றோர் பட்டப்படிப்பை பெற்றவர்களாயிருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால், ஒரு வழக்கறிஞர் தம்பதியினர் என்னை சுவீகாரம் எடுக்க முடிவாயிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இது கைவிடப்பட நேர்ந்தது. அவர்கள் ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுக்க விரும்பியதுதான் காரணம். ஆகையால், காத்திருப்போர் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த எனது வளர்ப்பு பெற்றோருக்கு என்னை சுவீகாரம் எடுக்க நேர்ந்தது. ஆனால், எனது வளர்ப்பு பெற்றோர் பட்டதாரிகளல்ல என்று தெரியவந்த பெற்றவள், மிகுந்த தயக்கத்துடனேயே சுவீகாரம் சம்பந்தமான ஆவணங்களில், சில மாதங்கள் கழித்து, கையெழுத்திட்டாள்அதுவும், நான் வளர்ந்தவுடன் நிச்சயமாக கல்லூரிக்கு அனுப்பப்படவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் மட்டுமே.   

நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு 17 வயது. தெரியாத்தனமாக, இதோ இந்த Stanford சர்வகலாசாலையைப் போலவே மிகவும் பணக்கார கல்லூரி ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கான கட்டணங்கள் எனது பெற்றோரின் சேமிப்பு முழுவதையுமே கரைத்துக் கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் நான் யோசித்தேன். இவ்வளவு செலவழித்து நான் வாழ்க்கையில் ஆகப்போவது என்ன? அதற்கு இந்தக் கல்லூரிப் படிப்பு எந்த வகையில் உதவி செய்யப்போகிறது? எந்த அர்த்தமும் தெரியாமலேயே எனது பெற்றோரின் ஒட்டுமொத்த சேமிப்பையே கரைத்துக்கொண்டிருப்பது நியாயமா? எல்லாம் எனக்கு சரியாக நடக்கும் என்று நம்பி, உடனடியாக கல்லூரியை விட்டு விலகினேன். அப்போது, இந்த முடிவு என்னை பெரிய அளவில் பயமுறுத்தியது; ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கையில், வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவுகளில் இது ஒன்று எனப் புரிகிறது

இந்த முடிவிலே இன்னொரு லாபமும் இருந்ததுமிகுந்த சலிப்பையும் மனச்சோர்வையும் தந்து கொண்டிருந்த கல்லூரி வகுப்புகளுக்கு நான் போகவேண்டியதில்லை; மாற்றாக, எனக்கு பிடித்த வேலைகளைச் செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். எனக்கென அப்போது தங்குமிடம் ஏதுமில்லை. நண்பர்களின் அறைகளில் தரையின் மீது படுத்துறங்கினேன். கோக் பாட்டில்களை பொறுக்கியெடுத்து விற்று ஓரளவு பசியைப் போக்கினேன். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் நல்ல யோகம் எனக்கு. ஹரே கிருஷ்ணா கோவிலில் ஜோரான  சாப்பாடு கிடைக்கும். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது அதன் பிரசாதம்

என்னுடைய வாழ்விலே நான் கற்றுக்கொண்டது இதுதான்: எதேச்சையாகவும் ஆவலுடனும் உள்ளுணர்வு உந்தித்தள்ள நான் செய்ததெல்லாம் பின்னாட்களில் பெரும் பயன் தந்திருக்கிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அலங்காரமான வடிவெழுத்துக்களை எழுத நான் கற்றுக் கொண்டதை சொல்லலாம். அந்நாளில் ரீட் கல்லூரி எழுத்துருக்களை அழகாகவும் அலங்காரமாகவும் எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒவ்வொரு சுவரொட்டியும், துண்டுப் பிரசுரமும் அழகான வடிவெழுத்துக்களைப் பயன்படுத்தி கையால் எழுதப்பட்டிருந்தவையாகும். கல்லூரியில் தொடர்ந்து படிக்காததினாலும், வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏதும் இல்லாததினாலும், நானும் இந்த அலங்கார எழுத்துக்களை எழுத கற்றுக்கொள்வது என்று முடிவு செய்தேன். செரிஃப் [Serif] மற்றும் சன்ஸ் செரிஃப் [Sans Serif] போன்ற வடிவெழுத்துக்களை எழுதவும் பயிற்சி பெற்றேன். எழுத்துருக்களின் வெவ்வேறு பரிமாணங்கள், அவைகளுக்கிடையே வேண்டியுள்ள இடைவெளி, அவைகளின் சில வகைகளை ஒட்டியமைத்தல் போன்றவற்றை அங்கு கற்றுக்கொண்டேன்இது ஒரு கலை வடிவம்; அறிவியலால் செய்ய முடியாததும் மிகவும் சூட்சுமமானதுமாகும். மிகுந்த விருப்பத்துடன் இதை கற்றுத்தேர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது  உதவப் போகிறது என்பது பற்றி ஒரு யோசனையும் இருந்ததில்லை அந்த நாட்களில்ஆனால், பத்து வருடங்கள் கழித்து, மகிண்டோஷ் [Macintosh] கணினியை நாங்கள் வடிவமைக்கும்போது, கற்றுக்கொண்ட அந்தக் கலை பெரிதும் துணை வந்தது.    மகிண்டோஷ் கணினி இந்த அம்சத்தையும் கொண்டதாக வெளிவந்ததுசொல்லப்போனால், அழகான எழுத்துருக்கள் கொண்டு வெளிவந்த முதல் கணினி அதுதான்கல்லூரியில் படிப்பு வேண்டாம் என்று நான் முடிவு செய்யாமல் இருந்திருந்தால், சும்மாயிருந்த நாட்களில் வடிவெழுத்து பயிற்சிக்கு செல்லாமல்  இருந்திருந்தால், மகிண்டோஷ் கணினிகள் அழகான எழுத்துருக்களைப் பெற்றிருக்க வாய்ப்பேயில்லை. விண்டோஸ் அச்சாக மகிண்டோஷை காப்பியெடுத்த ஒன்று என்பதால், இன்று உலகத்தில் எந்த கணினியிலும் அழகான வடிவெழுத்து அச்சுருக்கள் இருந்திருக்கவே வாய்ப்பில்லைபல்வேறு வடிவச்சுகளை கொண்ட எழுத்துருக்களும், அவைகளுக்கிடையேயான பொருத்தமான இடைவெளிகளையும் கண்ணுறும்போது, பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருப்பது புரிகிறதுகல்லூரியை உதறித்தள்ளியது, புதிதாக வடிவெழுத்துப் பயிற்சி பெற்றது - எல்லாமே பொருள் நிறைந்தவைதான். ஆனால், அந்த நாட்களில் இவையெல்லாம் அர்த்தம் தேடி செய்தவை அல்ல. அப்பொழுது எல்லாமே புள்ளிகள்; கோலம் தெரியவில்லை. புள்ளிகள் வைக்கப்படுகின்றபோது கோலத்தை பார்க்க முடிவதில்லை. கோலம் முடிந்த பிறகு, அதன் அழகை உணருகிறபோது, புள்ளிகளின் முக்கியத்துவம் புரிகிறது. ஆக, எதிர்காலத்தைப் பற்றிய எதோ ஒரு நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்துணிச்சல், விதி, வாழ்க்கை, கர்மவினைப்பயன் - எதையாவது ஒன்றை நம்பித்தான் ஆக வேண்டும்நம்பிக்கை என்னை கைவிட்டதேயில்லை; என் வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில்தான்.

நான் சொல்லப்போகும் இரண்டாவது கதை காதலையும், இழப்பையும் பற்றியதுஆரம்ப நாட்களிலிருந்தே, விரும்பியதை மட்டுமே செய்வேன். எனது நண்பன் வோஸும் [Woz] நானும், எனக்கு 20 வயதான நிலையில், என் பெற்றோரின் கார் ஷெட்டில் "ஆப்பிள்" நிறுவனத்தை தொடங்கினோம்.   கடுமையான உழைப்பின் பயனாக, கார் ஷெட் ஒன்றில் எங்கள் இருவரோடு மட்டும் ஆரம்பித்த நிறுவனம், பத்தே வருடங்களில் 4,000 பணியாட்களோடு 2 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தெழுந்ததுஎன்னுடைய 29-வது வயதில், எங்களின் ஆகப்பெரிய தயாரிப்பான மகிண்டோஷ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நான் "ஆப்பிள்" நிறுவனத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டேன். ஒருவருடைய சொந்த நிறுவனத்திலேயே அவருக்கு இந்த நிர்க்கதி நேருமா? "ஆப்பிள்" வளர்ந்தெழும் நிலையில், மிகவும் திறமைசாலி என்று நான் கருதிய நண்பரொருவரை நிர்வாகப் பொறுப்பிலே வேலைக்கு அமர்த்தினோம்ஆனால் நிறுவனம் வளர வளர அதைப்பற்றிய எங்களின்  தொலைநோக்கு வேறுபட்டன; கடைசியில் மோதல் தவிர்க்க முடியாததாயிற்று. முறுகல் முற்றியபோது, நிறுவனத்தின் இயக்குனர்கள் எனக்கு எதிராகப் போனார்கள். முப்பது வயதிலே, நான் மீண்டும் வேலையற்றவனானேன். அதுவும் அவமானகரமாக வெளியேற்றப்பட்டு. பெரும் உழைப்போடும், சிறிய விஷயங்களில் கூட மிகக் கவனமாகவும் வளர்த்தெடுக்கப்பட்ட, இளமைக் காலத்தை முழுவதுமாக எதற்காக நான் செலவிட்டேனோ, அந்த நிறுவனத்திலேயிருந்து வெளியேற்றப்பட்டது எனது நெஞ்சை நொறுக்கிப்போட்டது. சில மாதங்களுக்கு ஸ்தம்பித்துப் போனேன். என்னை நம்பிய மிகப்பல தொழில் முனைவோர்களை நான் கைவிட்டதாக உணர்ந்தேன். இத்தொழிலிலே இணை யாரும் இல்லை என்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்திருந்தபொழுது, தட்டிவிடப்பட்டு தடுமாறி தலைகுப்புற விழுந்தேன். டேவிட் பேக்கர்ட் [David Packard] மற்றும் பாப் நோய்ஸ் [Bob Noyce]  போன்றோரை சந்தித்து, அவர்களை கைவிடும்படியாக ஆனதற்கு மன்னிப்புக் கோரினேன்எல்லோரும் பார்த்து சிரிக்கும்படியான தோல்வி. கேவலமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடிவிடலாமா என்று கூட தோன்றியதுண்டு. ஆனால், நண்பர்களே, அந்த நிமிடத்திலே எனக்குள் ஒரு எண்ணம்என்னைபற்றியதான ஒரு உண்மை அது. நான் செய்வது எனக்குப் பிடிக்கும்பிடித்தால் மட்டுமே அதை செய்வேன்.  "ஆப்பிள்" என்னை தூக்கி எறியலாம். ஆனால், இன்னமும் எனது வேலை எனக்குப் பிடித்ததாகவேயிருக்கிறது. நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், செய்ய விரும்பிய செயலின் மேல் எனக்கிருந்த காதலை அவர்களால் பொசுக்க முடியவில்லைஎல்லாவற்றையும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க ஆயத்தமானேன்.

எனக்கு முதலில் புரியவில்லை; ஆனால், "ஆப்பிள்" நிறுவனத்தை விட்டு விலகியதுதான் எனக்கு நேர்ந்தவைகளிலேயே மிகவும் அற்புதமானதுபெரிய வெற்றியாளன் ஒருவனுக்கு இருக்கும் கவலையும் கவனமும் எனக்கு தேவைப்படவில்லைஒன்றை புதிதாக தொடங்குபவனுக்கு இருக்கும் அசட்டுத் துணிச்சல் எனக்கு மீண்டும் வந்தது. இந்தத் துணிச்சல் காரணமாகத்தான், எனது வாழ்க்கையிலேயே மிகப்பெரும் படைப்பூக்கங்களை வடித்தெடுத்த காலகட்டத்திற்கு வந்துசேர்ந்தேன்அடுத்த ஐந்து வருடங்கள் என்னை பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. இரண்டு நிறுவனங்கள் - நெக்ஸ்ட் [NeXT] மற்றும் பிக்ஸார் [Pixar] - தொடங்கியது இக்காலகட்டத்தில்தான். இதைவிட, வாழ்க்கையில் ஒரு மகத்தான பெண்மணியை சந்தித்து காதலாகி, குடும்பமாக விளங்கப்பெற்றதும் இப்போதுதான். எமது பிக்ஸார் நிறுவனம் இன்று உலகிலேயே அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிப்பில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் அனிமேஷன் திரைப்படமான பொம்மைக் கதை [Toy Story], பிக்ஸார்  தயாரிப்புத்தான். முதலிடத்தில் இருக்கும் அனிமேஷன் ஸ்டுடியோவும் "பிக்ஸார்"தான். அடுத்து நிகழ்ந்ததுதான் ஆச்சர்யமானது.    "ஆப்பிள்" நிறுவனம் என்னுடைய நெக்ஸ்ட்- வாங்கியதும், நான் ஆப்பிளிடமே திரும்பியதும் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. நெக்ஸ்ட்-ல் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் இன்று "ஆப்பிள்" புனர்ஜென்மம் எடுக்க மூலகாரணமாய் இருக்கிறதுசொந்த வாழ்க்கையில், லாரினும் [Laurene] நானும் மிகவும் மகிழ்ச்சியாக எங்கள் குடும்பத்தை வளர்த்திருக்கிறோம். "ஆப்பிள்" என்னை தூக்கி எறிந்திருக்காவிட்டால், இவைகளில் எதுவுமே நடந்திருக்காது. அது ஒரு கசப்பான மருந்துதான், சந்தேகமேயில்லைஆனால், நோயாளிக்கு தேவைப்பட்டது அதுதான். வாழ்க்கை சில சமயம் நமக்கு மரண அடி கொடுக்கிறது. நிலைகுலையாமல் நாம் நிற்க வேண்டியது இத்தருணங்களில்தான். நேசித்ததை மட்டுமே  செய்தது என்னை எப்போதுமே காப்பாற்றியிருக்கிறது. ஒன்றை பிடிக்காவிட்டால் அதைச் செய்யாதீர்கள்நீங்கள் மிகவும் நேசிப்பது என்ன என்று கண்டுபிடியுங்கள். உங்களின்  வேலை, காதல் - எதுவாகயிருந்தாலும் இதே மந்திரம்தான்வாழ்க்கையின் கணிசமான பகுதியினை நமது வேலையின் பொருட்டு கழிக்கிறோம்: இப்படியிருக்க, பிடித்ததை மட்டுமே நாம் செய்கிறோம் என்பது மிக முக்கியம். நம்மிடமிருந்து அரிய சாதனைகள் பிறப்பது என்பது இந்த நிலையில் மட்டுமே சாத்தியம்எது உங்களின் காதல் என்று இன்னும் நீங்கள் கண்டுபிடிக்காமலிருந்தால், உடனடியாக தேடுங்கள்; கண்டுபிடிக்கும்வரை நிற்க வேண்டாம். இதுவே காதலுக்கும் பொருந்தும்பிடித்தவரோடான வாழ்க்கையில்  நாள்பட நாள்பட சுவை கூடிக்கொண்டே போகும். ஆகையால், உங்களுக்குப் பிடித்ததை/பிடித்தவரை கண்டுபிடிக்கும்வரை தேடிக்கொண்டேயிருங்கள்நிற்க வேண்டாம்.

நான் உங்களுக்கு சொல்லவிருக்கும் மூன்றாவது கதை எதைப்பற்றியது தெரியுமா? இறப்பு. பதினேழாவது வயதில் நான் படித்த வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  "இதுதான் உன்னுடைய கடைசி நாள் என்று வாழ்ந்து வருவாய் என்றால், என்றாவது ஒருநாள் நீ சரி."  கடந்த 33 வருடங்களாக கண்ணாடியில் முகத்தை பார்க்கையில் என்னையே கேட்டுக்கொள்வதுண்டு. "இதுதான் என்னுடைய கடைசி நாள் என்றால், இன்றைக்குச் செய்ய இருப்பதைத்தான் நான் செய்வேனா?"  "இல்லை" என்பது தொடர்ந்து பதிலாக வரும்போதெல்லாம் நான் மாற வேண்டியதின் தேவையை உணர்வேன்நான் விரைவில் இறந்துவிடுவேன் என்ற உண்மைதான் மிகப்பெரும் முடிவுகளை எடுக்க காரணமாய் இருக்கிறதுஏனென்றால், புறவுலகு சார்ந்த எதிர்பார்ப்புகள், அகங்காரம், தோல்வியைப்பற்றிய பயம் - இவை எதுவுமே, சாவுக்கு முன்னால் அடிபட்டு விடுகிறது. உண்மையிலேயே எது முக்கியம் என்பது இத்தருணத்தில் மட்டுமே தெரியும்நம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்பதை சாவின் பிடியில் இருக்கும் ஒருவன் உணர்வான். ஆகவே நண்பர்களே, நான் சொல்கிறேன்: "பிடித்ததை மட்டுமே செய்யுங்கள்."

எனக்கு புற்றுநோய் என்பது ஒரு வருடத்திற்கு முன்புதான் தெரிந்ததுகணையப் புற்றுநோய். அப்படி ஒரு உறுப்பு நம்முள் உள்ளது என்பதே அப்போதுதான் தெரியும். குணப்படுத்த முடியாத வகையிலான புற்றுநோய் இது என்றும், அதிகபட்சம் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள்குடும்பம், வேலை, வர்த்தகம் ஆகியவற்றை அதற்குள்ளாக ஒழுங்குபடுத்துங்கள் என்ற மருத்துவ ஆலோசனை வேறு. "செத்துப் போவதற்கு தயாராகு" என்பதுதான் இதனுடைய அர்த்தம்அதாவது, உங்கள் குழந்தைகளிடம் வாழ்நாள் முழுவதும் என்ன பேசுவீர்களோ அதை மூன்று மாதங்களுக்குள் பேசிவிடுங்கள் என்று அர்த்தம். கும்பத்தில் நீங்கள் பார்த்து பார்த்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் செய்துமுடியுங்கள் என்று அர்த்தம். அதாவது, சீக்கிரமாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

 அன்று நாள் முழுதும் தொடர்ந்த சிகிச்சையின் முடிவில், நான் பீடிக்கப்பட்டிருப்பது ஒரு அரிய வகை புற்றுநோய் என்றும், முயன்றால் குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் மருத்துவர்கள் கூறினர்கணையத்தில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்ட சில செல்களை ஊன்மக்கூறு [biopsy] பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவை வைத்து இதை உறுதி செய்ததாக அருகிலிருந்த மனைவி சொன்னாள்இவை எல்லாம் முடிந்து, நண்பர்களே, இதோ உங்கள் முன்பு நான் நலமாக நிற்கிறேன்.  

சாவின் மிக அண்மையில் நான் நின்றது இந்த   நாட்களில்தான். இன்னும் சில தசாப்தங்கள் உயிர் வாழ முடியும் என்று நம்புகிறேன்சாவின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் நான் உங்களுக்கு சொல்வது, "இறப்பு என்பது நிச்சயமானதும், அறிவால் மட்டுமே அணுகக்கூடியதும் ஆகும்."  யாரும் சாவை விரும்புவதில்லை.  சொர்க்கத்திற்குப் போக விரும்புவன்கூட சாவை விரும்புவதில்லை.  ஆனாலும், அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும்.  யாரும் தப்ப முடியாது. வாழ்க்கையின் பெரிய கண்டுபிடிப்பே சாவுதான். வாழ்க்கையின் தன்மையையே முற்றாக மாற்றக்கூடியதும் அதுதான். இதனால் மட்டுமே பழையன கழிந்து புதியன வரும். இளமையின் வாசலில் நிற்கும் நண்பர்களே, உங்களுக்கும் வயதாகி, நடுங்கி, இங்கிருந்து விலகி எங்கோ போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான் சொல்வது நாடகத்தனமாக இருந்தாலும், உண்மையைத் தவிர இதில் வேறெதுவும் உண்டா?

நண்பர்களே, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவானது. இதில் வேறொருவர் கருத்துப்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். எந்தக் கொள்கையிலும் பிடிவாதம் வேண்டாம்கொள்கை என்பதே மற்றவரின் சிந்தனைதானேஉங்களின் வாழ்க்கை அதில் ஏதுஉங்கள் மனசாட்சியின் குரலை வேறொருவரின் இரைச்சல் அடக்கிவிட அனுமதிக்காதீர்கள்உங்கள் உள்மனம் சொல்வதை, இதயம் சொல்வதை பின்தொடர்ந்து செல்லுங்கள்அவைகளுக்கு உங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும்மற்றவர் சொல்வது எல்லாமே அடுத்தபடிதான்

நான் சிறுவனாக இருந்தபொழுது, எங்களுடைய  தலைமுறையினரை மிகவும் கவர்ந்த "மொத்த பூமியின் விவரம்" [The Whole Earth Catalog] என்ற பத்திரிக்கை நினைவுக்கு வருகிறதுஅந்த அற்புதமான இதழை நடத்தியவர், இதோ இங்கிருந்து மிக அண்மையில் இருக்கும் மென்லோ பார்க்-கில் [Menlo Park] வசித்து வந்த ஸ்டீவர்ட் ப்ராண்ட் [Stewart Brand].  அவரின் கவித்துவமான சிந்தனை இதழ் முழுதும் பரவியிருக்கும்நான் சொல்லவரும் காலம் 1960-கள்கணினிகள் உலகை ஆக்கிரமித்திருக்காத ஒரு காலம்தட்டச்சுப் பொறிகளாலும், கத்தரிக்கோல்களாலும், கைகளாலும் வடிவமைக்கப்பட்ட இதழ் அது. இன்று கூகுள் தேடுபொறி என்ன செய்கிறதோ, ஏறக்குறைய அதை மிகச் சிறிய அளவிலே, 35 வருடங்களுக்கு முன்பு, இந்த இதழ் எங்களுக்கு செய்து வந்தது. எங்களுக்கு மிகவும் பிடித்தமான பத்திரிக்கை அதுதான்.

பல இதழ்களுக்குப் பிறகுஸ்டீவர்ட் மற்றும் அவரது குழு இதை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1970களின் மத்திய வருடங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது உங்களுடைய வயது இருக்கலாம். இந்த பத்திரிக்கையின் கடைசி இதழின் பின் அட்டையில், அதிகாலை கதிரவனின் பின்னணியில் நீண்டிருக்கும் ஒரு மலையோர சாலையின் புகைப்படத்தின் அடியில் இந்த வாசகம்: "பசித்தவனாக இரு: தெரியாதவனாக இரு". [Stay Hungry. Stay Foolish]  இதுதான் அவர்களின் விடைபெறும் வாசகம். பசித்தவனாக இரு: தெரியாதவனாக இருயோசித்துப் பார்க்கையில், இப்படித்தான் நானும் இருந்திருக்கிறேன். இப்படி இருந்ததால்தான், இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்இன்று பட்டம் பெறுகின்ற உங்களையும் நான் இதையே சொல்லி வாழ்த்துவேன்:
      "பசித்தவனாக இரு: தெரியாதவனாக இரு"
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

[ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் நோய்மையின் காரணமாக, 2011 அக்டோபர் 5-ம் திகதி மரித்துப் போனார்.]