சர்வம் நாசம் மயம்

| Thursday, July 28, 2016
 ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார்.  "என்னை யாரும் ஓட்டளிக்கும் படி கட்டாயப்படுத்த முடியாது.  ஓட்டளிக்க தகுதியான வேட்பாளரும் கட்சிகளும் அரசியலில் நிலவும் சூழலில் நான் வாக்களிப்பேன்." துணிந்து நல்லவர்களாக மாறவும் அப்படியே நிலைக்கவும் நம்மில் பலருக்கு மனமுண்டு. ஆனால் பொழுது முழுவதும் சகதியில் நடக்க  வேண்டியிருக்கும் நிகழ்வில், கால்களை சுத்தமாக வைத்திருக்க எப்படி சாத்தியமாகும்?  "நான் யார் என்பதை நீதான் முடிவு செய்கிறாய்" என்பதாகத்தானே நிதர்சனம் நமக்கு வாய்த்திருக்கிறது.  


அங்கு எல்லாமே தேவலோகத்தில் இருப்பது போலவே இருந்தது. தேவனின் தோட்டமேதான் அது.  எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே எல்லாமும் இருந்தன.  அவனும் அவளும் ஆசிர்வதிக்கப் பட்டவர்களே. சுபிட்சமும் ஆனந்தமும் மட்டுமே நிலவின.  அன்பைத் தவிரவும் பகிர்ந்து மகிழ அங்கு வேறொன்றும் இல்லவே இல்லை.  பின்னால் கொடுமையின் - துரோகத்தின் - தீமையின் உருவாக மாறிப்போனவர்களும் அன்று அன்பே உருவாகத்தான் இருந்தார்கள்.  


இடையில் என்னென்னமோ நடந்து விட்டது.  யாரோ எதையோ சொன்னதை நம்பியதால், யார் பூக்களை நீட்டுகிறார்கள், யார் கத்தியை மறைத்து நம்மை அணைக்கிறார்கள் என்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை.   உறவே ஊறு தருவதால், துரோகத்தை நட்பென்று நம்பிக்  கெட வேண்டிய அவநிலை நம் எல்லோருக்கும் வாய்த்து விட்டதல்லவா?   நாமும் பயப்படுகிறோம்; நம்மைக் கண்டும் அச்சுறுகிறார்கள். மனிதர்களும் நாய்களும் பன்றிகளும் காகங்களும் ஒன்றைப் போலவே ஒன்று தெரிகிறது.  எல்லாமே .ஒன்றுதான். எல்லாமே கெட்டதுதான்.  நாசம் நம்மை சூழ்ந்து விட்டது.  மேய்ப்பர்கள் நம்மைக் கைவிட்டனர்.  மீட்சி இல்லவே இல்லை.  

இதைத்தான் வில்லியம் பிளேக் இப்படி எழுதுகிறார்.

The Defiled Sanctuary 
by William Blake

I saw a chapel all of gold 
That none did dare to enter in, 
And many weeping stood without, 
Weeping, mourning, worshipping. 

I saw a serpent rise between 
The white pillars of the door, 
And he forced and forced and forced 
Till down the golden hinges tore: 

And along the pavement sweet, 
Set with pearls and rubies bright, 
All his shining length he drew, 
Till upon the altar white 

Vomited his poison out 
On the bread and on the wine. 
So I turned into a sty, 
And laid me down among the swine.

0 comments:

Post a Comment